Pages

Saturday, August 11, 2012

ரமழான் சிந்தனை (இறையச்சத்தை அடைவோம்)


நோன்பு இறையச்சத்தை ஏற்படுத்தும் ஒரு வணக்கம். அதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

"விசுவாசிகளே நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பபட்டிருந்தது போல உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது." (அல் பகறா-186)

எனவே, நோன்பு நோற்பதன் ஊடாக உயர்ந்த ஆத்மிக பண்பான இறையச்சம் ஏற்படுகிறது. உண்மையில் இறையச்சம் என்பது இறைவனுடைய ஏவல்களை மனப்பூர்வமாக ஏற்றுநடக்கும் மனோநிலையையும் விலக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளும் மனோநிலையையும் பெறுவதாகும்.

நன்மைகளை நோக்கி ஆர்வத்தை தூண்டி தீமைகளை விட்டும் தவிர்ந்துகொள்ளும் தக்வா எனும் ஆயுதத்தை பெற்றுத்தரும் வணக்கமாக நோன்பு காணப்படுகிறது. அந்த வகையில்தான் நோன்பு ஒரு கேடயமாக அமைகிறது. ஏவல்களில் பொடுபோக்காக இருப்பதை விட்டும் பாதுகாத்து விலக்கல்களை செய்வதை விட்டும் தடுக்கும் பாதுகாப்பு கருவியாக நோன்புள்ளது.

இந்த வகையில் நோன்பு ஏற்படுத்தும் தக்வா உலகிலே சிறந்த பண்புகளோடு ஒரு முஸ்லிமை வாழவைத்து மறு உலக வாழ்வில் அவனுக்கு சுவனத்தை பெற்றுக்கொடுக்கிறது.

இறையச்சமுள்ளவர்களுக்கே சுவர்க்கம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். "எங்களது அடியார்களில் யார் இறையச்சமுள்ளவர்களாக இருந்தார்களோ அவர்களை அந்த சுவனத்தின் வாரிசுகளாக ஆக்குவோம்.''(மர்யம்-63)

மனித வாழ்வின் இறுதி இலட்சியமான சுவனத்தை அடைந்து கொள்ள தக்வா எனும் சாதனத்தை நோன்பினூடாக பெற்றுக்கொள்ள முனைவோமாக!  

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment