Pages

Monday, August 13, 2012

ரமழான் நற்சிந்தனை (பயிற்சி தொடரட்டும்)


அருள்மிகு ரமழானின் இறுதி வேளையை அடைந்துவிட்டோம். இறைவனுடனான இறுக்கமான உறவை  பேண பல முயற்சிகளை மேற்கொண்டோம். இறை வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருக்கமான உறவைப் பேணினோம்.
அல்குர்ஆனை அதிகமாக ஓதினோம். பிறர் ஓதுவதை செவிமடுத்தோம். அதன் கருத்துக்களை ஓரளவு புரிந்துகொள்ள முயன்றோம். அல்லாஹ்வின் வார்த்தையோடு தொடர்புபட்டு அவனது நெருக்கத்தை ஏற்படுத்தினோம்.
பர்ளான தொழுகைகளை முடிந்தளவு கூட்டாக நிறைவேற்றினோம். முன் பின் ஸூன்னத்துக்களை பேணி தொழுதோம். இரவு நேர வணக்கங்களில் ஈடுபட்டோம். ஏழை எளியவர்களின் கஷ்டங்களிலே பங்கெடுத்தோம். தான தர்மங்களை வாரி வழங்கினோம். இறைமன்னிப்பை பெற்றுக்கொள்வதற்காக பாவமன்னிப்புத் தேடினோம்.
ரமழானின் பூரண பயனை பெற்றுக்கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்தோம். மனோ இச்சைகளுக்கு மாற்றமாக பாவ செயல்களிலிருந்து தூரமாகினோம். இப்படியாக ஒரு மாத காலம் ரமழானில் மிக சிறந்த பயிற்சியை பெற்றுக்கொண்டோம்.
இந்த பயிற்சிகளும், உயர்ந்த ஆத்மீக செயற்பாடுகளும், சிறந்த பண்பாடுகளும் ரமழானுக்கு பின்னரும் எம்மிலே பிரதிபலிக்கட்டும். ரமழானின் தாக்கம் முழு வாழ்வாழ்விலும் பாதிப்புச் செலுத்தட்டும். நோன்பின் பின்னரான வாழ்வுக்காக நாம் தயாராகுவோம். இறைவன் எமக்கு கிருபை செய்வானாக.
தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை

No comments:

Post a Comment