Pages

Monday, August 6, 2012

ரமழான் நற்சிந்தனை (தர்மம் விருத்தியை ஏற்படுத்தும்)

ரமழான் நோன்பின் மாதம் போலவே தான தர்மங்கள் வழங்கும் மாதமுமாகும். நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் வீசும் காற்றை விட வேகமாக தான தர்மங்கள் செய்பவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் எமக்களித்த செல்வத்திற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். செல்வம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அதனை சிலருக்கு அதிகமாக கொடுத்து சோதிக்கிறான். இன்னும் சிலருக்கோ அளவாக கொடுத்துள்ளான்.

இந்நிலையில் செல்வம் வழங்கப்பட்ட அடியான் அதனை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு ஏழை எளியவர்களுக்கு தர்மம் என்ற வகையில் உதவிகளை செய்ய வேண்டியுள்ளான். தான தர்மங்கள் அதிகமாக செய்வதன் மூலமாக சொத்தாசை, சுய நலம் போன்ற தீய பண்புகளிலிருந்து விடுதலை பெற்று உள்ளத்தில் படிந்திருக்கும் கஞ்சத்தனத்திலிருந்து நீங்கி சிறந்த தியாகியாக, கொடைவள்ளலாக மாறிவிடுகிறான்.

அல்லாஹ்வாலும் ஏனைய மனிதர்களாலும் விரும்பப்படக்கூடியவனாக மாறிவிடுகிறான். இத்தகைய ஸதகாவை கொடுப்பதன் மூலம் உள்ளம் தூய்மையடைவதோடு செல்வத்திலும் அபிவிருத்தி ஏற்படுகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் ஸதகாவானது செல்வத்தில் எந்த குறையையும் ஏற்படுத்தமாட்டாது என கூறினார்கள். எமது செல்வத்திலிருந்து அதிகம் தர்மங்களை வழங்கி அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ள முன்வருவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் – பேருவளை

No comments:

Post a Comment