Thursday, March 29, 2012

Today's Quotes

When love firmly settles in the heart, the limbs will only act in obedience to Allah(Ibn Rajab)

Wednesday, March 28, 2012

Today's Quotes

Constantly thinking about someone is a sign of true Love. So how often do those who claim to love Allah remember Him...?

Dhua _ துஆ

Dua is the most powerful weapon against trouble. The most Effective medicine against illness. The most valuable gift for a special person. Ask dua for me also.. Include me in your Thahajjaths...


Monday, March 26, 2012

அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி ஜும்ஆ பயான்கள்

முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் கொண்ட பைபிள்.

முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும் 1500 வருட பழைமை வாய்ந்த பைபிள் ஒன்றை வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய 1500  வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது
அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள் இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது 
"இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா நபியை இறைவனாக நம்பாது இறைவனின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது.அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற கூற்றும் மறுக்கப்படுகிறது .ஈஸா நபி அவர்கள் முஹம்மது நபி (ஸல் ) வருகையை எதிர்வு கூறியுள்ளார் ." என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்

காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர் ஆனும்



[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால் அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால் இந்த வடிவை அது பெறுகிறது.

அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும் இருக்க வேண்டும் என்கிறது.

இரக்கம் அல்லது அருள் - ரஹ்மத் இன்னொருவரை நோக்கி எழுகின்ற கலப்பற்ற தூய அன்புணர்வு. பலவீனத்தை மன்னித்துவிடும். துன்பம் கண்டு இரங்கும் உணர்வு அது. இது கணவனுக்கும் மனைவிக்குமிடையே அவசியம் நிலவ வேண்டிய உணர்வு என்கிறது அல்குர்ஆன்.

அத்தோடு மனைவி கணவனுக்கு அமைதி தருபவளாக அமைய வேண்டும். இவ்வாறு அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையே காணப்பட வேண்டிய உணர்வுத் தொடர்பை வரையறுக்கிறது.]