Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts

Friday, November 27, 2015

சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று பொய்யாக பெயரிட்டுள்ளார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - meelparvai.net

நவீன காலனித்துவ மூலோபாய திட்டமிடல்களின் படி புதிய உலக ஒழுங்கில் தேசங்கள் மீதான நேரடி ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதில்லை.
துருவ மயப்படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் அரசியல் பொருளாதார இராணுவ நலன்களிற்கேற்ப தேசங்களின் ஆட்சி அதிகாரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.

சோஷலிச கம்யூனிச அதிகார மையங்களுடன் அணி சேர்ந்தோ அல்லது சேராமல் தனியாகவோ அல்லது பிராந்தியங்களில் கூட்டாகவோ ஒத்துழைக்க மறுக்கும் தேசங்களில் அரசியல் பொருளாதார இராணுவ இஸ்திரத் தன்மைகளை ஆட்டங் காணச் செய்கின்ற மூலோபாய நகர்வுகள் மேலாதிக்க சக்திகளினால் முடுக்கி விடப் படுகின்றன.

ஐகிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச நீதி மன்றம், சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி உற்பட அத்தனை சர்வதேச அமைப்புக்களும் நவயுக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளால் தமது நலன்களுக்கேற்ப நகர்த்தப் படுகின்றன.

Sunday, August 9, 2015

கையடக்கத் தொலைபேசிகளும், அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்!

(சை. பைஜுர் ரஹ்மான்) 
நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும். 

நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது. இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக

Sunday, October 26, 2014

அம்மார் பின் யாஸிர் (ரழி),

தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.


Friday, October 24, 2014

துஆ என்பது புனித இபாதத்

புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.

ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.

இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்

Thursday, October 23, 2014

அறிவுரைகள் சில...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது, இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும் மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம். எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் 
தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14} 
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Monday, October 20, 2014

Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam

The following is the Fatwa of Standing committee (IFTA): Shiekh Abdulaziz Ibn Baaz and Shiekh Ibn Al-Uthaimeen. 
Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam 
May 19, 2013 | Filed under: Fatawas of Scholars,Featured,Q&A Section

It is a common act seen across many cultures that women change their surname from father's to their husband’s surname after marriage. This is widely practiced throughout the world and Muslims have also adopted it. But, how many of you are aware that it is Haraam for a woman (after marriage to change her surname from her father to that of her husband? Example, before marriage she was “Fatima maqsood Ali” and after marriage to Sajid Siddique, she changes to “Fatima Sajid Siddique” or just “Fatima Sajid”.

This is haraam. It is not permissible for a woman to take her husband’s name or his family name because that is attributing oneself to someone other than one’s father, and imitating the kuffaar from whom this custom was adopted.

There are some very stern warnings regarding this from Allah and his Prophet (pbuh). Read below: 
“( ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ : ﻣَﻦْ ﺍﻧْﺘَﺴَﺐَ ﺇِﻟَﻰ ﻏَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ .. ﻓَﻌَﻠَﻴْﻪِ
ﻟَﻌْﻨَﺔُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ ( ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 2599 ﻭﻫﻮ ﻓﻲ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺠﺎﻣﻊ 6104 ″
The Prophet (pbuh) said: “Whoever calls himself by other than his father’s name (or attributes himself to someone other than his father), will be cursed by Allaah, the angels and all the people.” (Reported by Ibn Maajah, 2599)

ﺭﻭﻯ ﺍﻟﺒﺨﺎﺭﻱ (3508 ) ﻭﻣﺴﻠﻢ ( 61 ) ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺫَﺭٍّ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻧَّﻪُ
ﺳَﻤِﻊَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُ : ﻟَﻴْﺲَ ﻣِﻦْ ﺭَﺟُﻞٍ ﺍﺩَّﻋَﻰ ﻟِﻐَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ
ﻭَﻫُﻮَ ﻳَﻌْﻠَﻤُﻪُ ﺇِﻟَّﺎ ﻛَﻔَﺮَ ﻭَﻣَﻦْ ﺍﺩَّﻋَﻰ ﻗَﻮْﻣًﺎ ﻟَﻴْﺲَ ﻟَﻪُ ﻓِﻴﻬِﻢْ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦْ ﺍﻟﻨَّﺎﺭِ

Narrated from Abu Dharr (ra) that he heard the Prophet (pbuh) say: “Any man who knowingly attributes himself to someone other than his father is guilty of kufr. Whoever claims to belong to a people when he has nothing to do with them, let him take his place in Hell.” [Bukhari 3508 and Muslim 61]

It was narrated that Sa’d ibn Abi Waqqaas and Abu Bakrah said: The Messenger of Allaah (pbuh) said: “Whoever claims after having become Muslim to belong to someone who is not his father, knowing that he is not his father, Paradise will be forbidden to him.” [Bukhaari 4072 and Muslim 63]

What else needs to be said in this matter when clear commands of prophet (pbuh) are present? Besides this, the Salaf-us-saliheen have also sternly warned against this. 

It is not permitted for anyone to claim to belong to anyone other than his father. Imitating the kuffaar by dropping the wife’s surname and giving her the husband’s name is haraam; it is also a form of falsehood, and humiliation of the woman. There is no blood tie between the husband and wife, so how can she take his surname as if she is part of the same lineage?

Moreover, she may get divorced, or her husband may die, and she may marry another man. Will she keep changing her surname every time she marries another man? Furthermore, there are rulings attached to her being named after her father, which have to do with inheritance, spending and who is a mahram, etc. Taking her husband’s surname overlooks all that.

The husband is named after his own father, and what does she have to do with the lineage of her husband’s father? This goes against common sense and true facts. The husband has nothing that makes him better than his wife so that she should take his surname, whilst he takes his father’s name.

In many cases it has been seen that the woman is not ready to change the surname and the husband forces her to do so. Who doesn't love his or her own name given to us by our father?

Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

Friday, October 10, 2014

நாவை பேணுவோம்...!!!

  • புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)
  • பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)
  • அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)
  • நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)
  • நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)
  • உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)
  • ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)
  • மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)
  • வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
  • மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)
  • நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)
  • கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)
  • கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)
இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும், நாம் நாவை பாதுகாக்கவில்லை என்றால்...??

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

மெய்யும் பொய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

Wednesday, September 3, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...

சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...

கோள்களின் இயக்கம்:


கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது. 
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.

Tuesday, September 2, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
(54:22) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (54:22)
பெருவெடிப்பு கொள்கை (bigbang theory )

விஞ்ஞானம், இந்த உலகத்தின் தோற்றம் பரிணாமத்தின் அடிப்படையில் பெருவெடிப்பு கொள்கையினால் உருவானது என்கிறது. 

பெருவெடிப்பு கொள்கையை பற்றி சற்று பார்ப்போம். இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார். ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின்பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

Sunday, July 6, 2014

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.

1. பத்ர் போர் :
இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள்
தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.

2. மக்கா வெற்றி : 
குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.

3. அன்-ஜாலித் போர்:
உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.

4. ஹைதீன் போர்:
உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.

இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…

5. குவாடிலட் போர்: 
ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக
மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.

Tuesday, May 13, 2014

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்

Copied from All Ceylon Jammiyathul Ulama's website, 
பிரசுரித்த தேதி 20.04.2004ஹிஜ்ரி தேதி 29.02.1425 பதிவு இல 006/ACJU/F/2004/011 

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.

மனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:
‘வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ‘வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே’ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.’ (2:275)
‘விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.’ (2:278, 279)

Wednesday, April 30, 2014

இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை

முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். – Sue Watson, Professor, Pastor, Church Planter and Missionary (முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி)

உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன்.

முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன்.

Saturday, March 15, 2014

சிறுவர் துஸ்பிரயோமற்ற உலகை உருவாக்குவதற்கு....?

பிரபஞ்சங்களின் ரப்பினது வழிகாட்டலில் உலகம் வழிநடாத்தப்படவேண்டும்!
  1. உலகில் 100 மில்லியன் பிள்ளைகள் வீடுகளற்ற நிலையில் வீதிகளில் வசிக்கிறார்கள்.
  2. நோயினாலும் போசாக்கு குறைபாடாலும் ஒரு கிழமைக்கு 250,000 பிள்ளைகள் மரணமடைகிறார்கள்.
  3. உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் சிறுவர்கள் பாலியல் போகப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்
  4. இருபது மில்லியன் சிறுவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
  5. பத்து மில்லியன் சிறுவர்கள் சிறுவர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
  6. எயிட்சினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள் சுமார் 2010 இல் 30 மில்லியன்.



இத்தகைய ஒரு கொடூர நிலைக்கு இட்டுச்சென்றது எது?
  1. ஏகாதிபத்தியவாதிகளது பொருளாதார நலன்களுக்கான நாடுகள் மீதான அத்து மீறல்.
  2. மேற்கினது சுரண்டலை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமை.
  3. அவர்களது சமூக கலாச்சார விழுமியங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் (எயிட்ஸ்)
  4. மற்றும் இன்றைய முதலாளித்துவ அரசுகளது சுயனநலப்போக்கு.
இத்தகைய இழிநிலையில் இருந்து மீட்சிபெற இஸ்லாம் மீள உலக தலைமைத்துவத்தை பெற்று உலகினை இறைவழிகாட்டல் அடிப்படையில் ஆட்சி செய்ய வேண்டும்.

இது குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்." (அல்குர்ஆன் 16:89)


Monday, March 3, 2014

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 


"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான். 

Monday, January 6, 2014

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியும் இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றமும்

  • இஸ்லாமிய கிலாபத் ஏன் அவசியம்?
  • உலகத்திலிருந்து சுவனத்தை தேடப் போகிறீர்களா?
  • உலகத்தை சுவனமாக்கி மறுமையில் சுவனத்தை அடைய போகிறீர்களா?
  • உள்ளம் அமைதிப்பட வேண்டுமா?
  • மனிதம் பாதுகாப்பான வாழ்வை உலகில் பெற வேண்டுமா?
இஸ்லாமிய உம்மத்தின் பலம்
  • ஈமான்
  • சகோதரத்துவம்

சமகால இஸ்லாமிய பணி
  • தனிமனித முயற்சிகள்
  • கூட்டு முயற்சிகள்
'கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை கட்டுப்பாடு இன்றி தலைமைத்துவம் இல்லை. (உமர் (ரழி)

நபியவர்கள் உருவாக்கிவிட்டுச்சென்ற இஸ்லாமிய கிலாபத் 1924ம் ஆண்டு வரை இந்த உலகில் நீடித்தது. அது இடைக்கிடை பல்வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டாலும் சுமார் இவ்வுலகில் 13 நூற்றாண்டுகள் முஸ்லிம் உம்மத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கிவந்தது.
ரோம பாரசீக சாம்ராஜ்யங்கள் இஸ்லாத்துக்கு முன்னால் தோல்வியை தழுவியதன் பின்னர் அவை அன்று முதல் இஸ்லாத்தை எதிர்க்க ஆரம்பித்தனர்
அதற்கு காரனம்
  1. ஆரசியல் ரீதியான தலைமைத்தை இழந்தமை
  2. தமது பொருளாதார மையங்களை முஸ்லிம்களிடம் பறிகொடுத்தமை
  3. தமக்கு கீழால் வாழந்ந அதிகமானோர் இஸ்லாத்தை தழுவியமை

Friday, January 3, 2014

சிலுவை யுத்தங்கள்

நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திய அதேவேளை, ஏனைய சமயங்களையும் அச்சமயங்களைப் பின்பற்றுகின்றவர்களையும் மதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். எனவே, இஸ்லாம் ஏனைய சமயங்களை மதிக்கும் உயர்ந்த பண்பைக் கொண்டது. ஆனால், இஸ்லாத்தைப் பல வகையிலும் விமர்சிக்கின்ற கிறிஸ்தவர்களும் யூதர்களும் இஸ்லாத்தின் இவ்வுயர் பண்புக்கு மாற்றமான பண்புகளையே வரலாறு நெடுகிலும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இவ்வகையிலான ஓர் அம்சமாக அமைவதே கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மதத்தின பெயரால் மேற்கொண்ட கொடூரமான சிலுவை யுத்தங்களாகும்.

நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்தே யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், யுத்தங்கள் போன்ற கெடுபிடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நடவடிக்கைகள் வியாபகமடைந்து கி.பி. 11ம் நூற்றாண்டளவில் சிலுவை யுத்தங்களாகப் பரிணமித்தன. சிலுவைப் படையெடுப்பின் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமய, சமூக ரீதியாகப் பின்னடையச் செய்வதே கிறிஸ்தவர்களினதும் யூதர்களினதும் முழு நோக்கமாக இருந்தது. சிலுவை யுத்தங்கள் என்பவை, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றி, முஸ்லிம்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து, இஸ்லாமிய ஆட்சியை ஒழித்துக் கட்டும் நோக்கில் மேற்கொண்ட யுத்தம் எனலாம். இவ் யுத்தத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்தவர்களின் புனிதப் போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் கொழுகிக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் 'சிலுவை யுத்தம்' எனப் பெயரிடப்பட்டது.

Tuesday, December 31, 2013

தகவல் (Information)

இன்று நாங்கள் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து பிரயோசனங்களையும் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் தகவல் என்றால் என்ன என்பது பற்றி யாருமே ஆழமாக சிந்திக்க முற்படுவதில்லை. தகவல் என்றால் பத்திரிகைகளிலோ, புத்தகங்களிலோ, வானொலியிலோ அல்லது தொலைத்தொடர்பு சாதனங்களின் வாயிலாக கிடைக்கக் கூடிய செய்திகள் என்று கருதுகின்றோம். அல்லது ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதி தகவல் என்று கருதுகின்றோம்.



உண்மையில் தகவல் (Information) என்றால் சடப்பொருளோ, சக்தியோ அல்ல. தகவல் என்பது ஒரு கற்பனையான விடையமும் அல்ல. அவ்வாறெனில் தகவல் என்றால் என்ன....? 

இது சம்பந்தமாக விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். தகவல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் உலகிற்கு ஒரு புதிய விஞ்ஞானத்தை வழங்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்தின் படி இந்த உலகம் உருவாக முதலேயே அதாவது பெரு வெடிப்பு (big bang) நிகழ்வதற்கு முதலே தகவல் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அது எதைப் போன்றது என்றால், தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவு பயன்படுத்தும் கணனியைப் போல.

Monday, December 16, 2013

இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்

ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை சற்றுவிளக்கமாக பார்ப்போம்.

ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

சுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான "இஞ்சீல்" எனப்படும் "பைபிள்" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக