Sunday, December 27, 2015

புதிதாய் பிறந்த குழந்தைகளின் மீதான கவனிப்பு

கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன,

இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும். தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்.
  • தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. 
  • தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது.
  • தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகரிக்கின்றது.

Monday, December 14, 2015

வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் பாரிசவாதம்

நாளாந்த கருமங்களில் ஈடுபடும் போது பின்வரும் ஏதேனும் மாற்றங்களை உணர்கின்றீர்களா?
  • உடலினோரு அங்கமோ (முகம், கை, கால்) பாதி உடலோ உணர்வற்ற தன்மை திடீரென ஏற்படுதல்
  • சடுதியானதொரு தடுமாற்றம் அல்லது பேசுவதற்று முயற்சி செய்யும் போது நாக்கு பிறழாத தன்மை அல்லது மற்றவர்கள் பேசுவதை கிரகித்து உள்வாங்க முடியாத தன்மை.
  • ஒரு பக்கப் பார்வையோ, இரு கண்களின் பார்வையிலோ திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல்.
  • நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென உருவாகும் சமனிலை குழப்பம் அல்லது உடல் கட்டுப்பாட்டுடன் இயங்குவதில் ஏற்படும் குழப்பம் அல்லது தலைச்சுற்று , சாதாரணமாக நடக்கமுடியாமை அல்லது தள்ளாட்டம்.
  • எந்தவொரு காரணமும் இன்றி உருவாகும் தாங்கமுடியாத தலைவலி

இவற்றில் எந்தவொரு மாற்றம் தென்படினும் உடனடியாக