Sunday, October 26, 2014

அம்மார் பின் யாஸிர் (ரழி),

தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.


Friday, October 24, 2014

துஆ என்பது புனித இபாதத்

புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.

ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.

இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்

Thursday, October 23, 2014

அறிவுரைகள் சில...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது, இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும் மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம். எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் 
தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14} 
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Monday, October 20, 2014

Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam

The following is the Fatwa of Standing committee (IFTA): Shiekh Abdulaziz Ibn Baaz and Shiekh Ibn Al-Uthaimeen. 
Changing surname (family name) to husband’s name after marriage is Prohibited in Islam 
May 19, 2013 | Filed under: Fatawas of Scholars,Featured,Q&A Section

It is a common act seen across many cultures that women change their surname from father's to their husband’s surname after marriage. This is widely practiced throughout the world and Muslims have also adopted it. But, how many of you are aware that it is Haraam for a woman (after marriage to change her surname from her father to that of her husband? Example, before marriage she was “Fatima maqsood Ali” and after marriage to Sajid Siddique, she changes to “Fatima Sajid Siddique” or just “Fatima Sajid”.

This is haraam. It is not permissible for a woman to take her husband’s name or his family name because that is attributing oneself to someone other than one’s father, and imitating the kuffaar from whom this custom was adopted.

There are some very stern warnings regarding this from Allah and his Prophet (pbuh). Read below: 
“( ﻭﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ : ﻣَﻦْ ﺍﻧْﺘَﺴَﺐَ ﺇِﻟَﻰ ﻏَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ .. ﻓَﻌَﻠَﻴْﻪِ
ﻟَﻌْﻨَﺔُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ ( ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 2599 ﻭﻫﻮ ﻓﻲ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺠﺎﻣﻊ 6104 ″
The Prophet (pbuh) said: “Whoever calls himself by other than his father’s name (or attributes himself to someone other than his father), will be cursed by Allaah, the angels and all the people.” (Reported by Ibn Maajah, 2599)

ﺭﻭﻯ ﺍﻟﺒﺨﺎﺭﻱ (3508 ) ﻭﻣﺴﻠﻢ ( 61 ) ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺫَﺭٍّ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻧَّﻪُ
ﺳَﻤِﻊَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُ : ﻟَﻴْﺲَ ﻣِﻦْ ﺭَﺟُﻞٍ ﺍﺩَّﻋَﻰ ﻟِﻐَﻴْﺮِ ﺃَﺑِﻴﻪِ
ﻭَﻫُﻮَ ﻳَﻌْﻠَﻤُﻪُ ﺇِﻟَّﺎ ﻛَﻔَﺮَ ﻭَﻣَﻦْ ﺍﺩَّﻋَﻰ ﻗَﻮْﻣًﺎ ﻟَﻴْﺲَ ﻟَﻪُ ﻓِﻴﻬِﻢْ ﻓَﻠْﻴَﺘَﺒَﻮَّﺃْ ﻣَﻘْﻌَﺪَﻩُ ﻣِﻦْ ﺍﻟﻨَّﺎﺭِ

Narrated from Abu Dharr (ra) that he heard the Prophet (pbuh) say: “Any man who knowingly attributes himself to someone other than his father is guilty of kufr. Whoever claims to belong to a people when he has nothing to do with them, let him take his place in Hell.” [Bukhari 3508 and Muslim 61]

It was narrated that Sa’d ibn Abi Waqqaas and Abu Bakrah said: The Messenger of Allaah (pbuh) said: “Whoever claims after having become Muslim to belong to someone who is not his father, knowing that he is not his father, Paradise will be forbidden to him.” [Bukhaari 4072 and Muslim 63]

What else needs to be said in this matter when clear commands of prophet (pbuh) are present? Besides this, the Salaf-us-saliheen have also sternly warned against this. 

It is not permitted for anyone to claim to belong to anyone other than his father. Imitating the kuffaar by dropping the wife’s surname and giving her the husband’s name is haraam; it is also a form of falsehood, and humiliation of the woman. There is no blood tie between the husband and wife, so how can she take his surname as if she is part of the same lineage?

Moreover, she may get divorced, or her husband may die, and she may marry another man. Will she keep changing her surname every time she marries another man? Furthermore, there are rulings attached to her being named after her father, which have to do with inheritance, spending and who is a mahram, etc. Taking her husband’s surname overlooks all that.

The husband is named after his own father, and what does she have to do with the lineage of her husband’s father? This goes against common sense and true facts. The husband has nothing that makes him better than his wife so that she should take his surname, whilst he takes his father’s name.

In many cases it has been seen that the woman is not ready to change the surname and the husband forces her to do so. Who doesn't love his or her own name given to us by our father?

Monday, October 13, 2014

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க குணம் (தாத்) மற்றும் தன்மை (ஸிபத்து) ஆகியவற்றை அறிவிக்கின்றன. ரப், மாலிக், அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்பவையே அந்த நான்கு திருப்பெயர்கள். முதல் இரண்டு பெயர்கள் அல்லாஹ்வின் நிர்வாக அடிப்படையிலும், அடுத்த இரண்டும் அல்லாஹ்வின் செயல் ரீதியிலும் அமைந்துள்ளன. சூரா பாத்திஹாவின் பிற்பகுதியில் நாம் கேட்கும் துஆ அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை தொழுகையிலும் நாம் முதன் முதலில் உன்னதமான சூரா பாத்திஹாவை ஓதிவிட்டுப் பின்வேறு சூராவின் திருவசனங்களையும் ஓதி அல்லாஹ்வுக்கே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்து நன்றியுடன் வணங்குகிறோம். இனி சூரா பாத்திஹாவில் வரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களின் மகத்துவத்தை ஆராய்வோம்.

முதல் வசனம் : “அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” – இதன் பொருள் “எல்லாப் புகழும் எல்லா உலகும் ஏகனாய் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே ஆகும்,” இவ்வசனத்தில் ரப்புல் ஆலமீன் என்பது வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்துக் காத்து பராமரிக்கும் துவக்கமும் முடிவும் இல்லாத அல்லாஹ்வின் நிர்வாக நிலை (official position). வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அறிவியல் அடிப்படையில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. இதனை அறிவியலார் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் படிப்படியாக வெளிக்கொணர்கின்றனர்.

Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

காய்ச்சல் - ஒரு நோய் அல்ல?

ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (Fever) எனப்படுகின்றது. 

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோய் அல்ல அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடலின் ஏனைய இடங்களில் கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டும் அறிகுறியாகும். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. 

Friday, October 10, 2014

நாவை பேணுவோம்...!!!

  • புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)
  • பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)
  • அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)
  • நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)
  • நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)
  • உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)
  • ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)
  • மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)
  • வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
  • மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)
  • நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)
  • கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)
  • கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)
இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும், நாம் நாவை பாதுகாக்கவில்லை என்றால்...??

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

மெய்யும் பொய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.