Thursday, January 31, 2013

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.


கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால் தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.

பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

Tuesday, January 29, 2013

நிர்வாண உலகிலிருந்து நி(க்)காப் வரை - பெண் விடுதலையின் அடையாளம்

நிர்வாண உலகிலிருந்து நி(க்)காப் வரை - பெண் விடுதலையின் அடையாளம்!

Monday, January 28, 2013

இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?

இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?

பதில்:


‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்: நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

Friday, January 18, 2013

ஆப்பிள் சாதனங்களில் தமிழ்


விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. 

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. 

இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார். 


இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. 

Wednesday, January 16, 2013

வேர்டில் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க


வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. 

மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி: 

மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின் மெனு பாரில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக. 

புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். 

அதில் Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். 

பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 

இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

Monday, January 14, 2013

கூகுள் மெயில் - சில தேடல் வழிகள்



கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். 

குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். 

நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற. எ.கா.from: kannan:கண்ணன் என்பவரிடமிருந்து வந்த மெயில்கள் மட்டும் காட்ட.

to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட. 
எ.கா: to:kannan.கண்ணன் என்பவரிடமிருக்கு (நீங்களோ அல்லது மற்றவர்கள், அந்த மெயிலைப் பயன்படுத்தி) அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.

subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் “dinner” என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.

OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட. எ.கா. from:kannan OR from:lakshmi.கண்ணன் அல்லது லஷ்மி என யாரிடமிருந்தும் வந்த மெயில்களைக் காட்ட. 

இதில் இந்த கட்டளைச் சொல் OR எப்போதும் கேபிடல் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். 

(hyphen): குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க. எ.கா. dinner movie:கடிதங்களில், என்ற சொல் மட்டுமே உள்ளவை. அவற்றில் movie என்ற சொல் இருந்தால் அது தேவையில்லை.

label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ.கா.from:kannan label: myfamily; myfamily என்ற லேபிலில் உள்ள கடிதங்களில், kannan அனுப்பிய கடிதம் மட்டும். 

has:attachment: அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டவும். எ.கா. from:kannan has:attachment: இங்கு கண்ணனிடமிருந்து வந்த மெயில்களில், அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். 

list: குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும். எ.கா. list:info@example.com.info@example.com என்ற சொற்களை ஹெடரில் பெற்ற மெயில்கள் மட்டும். அதாவது இந்த மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பெற்ற மற்றும் அந்த லிஸ்ட்டுக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் மட்டும். 

filename: இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட பைல் அல்லது பைல் வகையினைப் பெற. எ.கா.filename:physicshomework.txt “physicshomework.txt” என்ற அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். label:work filename:pdf: “work” என்ற லேபில் இடப்பட்டு, பி.டி.எப். பைல் அட்டாச்மெண்ட் ஆக உள்ள மெயில்கள் மட்டும். 

“ "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட. எ.கா. “i’m feeling lucky”: “i’m feeling lucky” என்ற சொற்களை உடைய மெயில்கள் மட்டும். இந்த தேடலில் பெரிய, சிறிய எழுத்து வித்தியாசம் பார்க்காமல் தேடப்படும். எடுத்துக் காட்டாக இந்த தேடலில் “I’m feeling lucky” எனச் சொற்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் காட்டப்படும். 

இன்னொரு எடுத்துக் காட்டினையும் இங்கு பார்க்கலாம். subject:”dinner and a movie” என்று கொடுத்தால், சப்ஜெக்ட் கட்டத்தில், “dinner and a movie” என்ற சொற்கள் உள்ள மெயில்கள் மட்டும் என்று பொருள். 

in:anywhere: பொதுவாக நாம் கொடுக்கும் தேடல்கள் வினாக்கள், இன் பாக்ஸில் மட்டும் தேடிக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல், Spam மற்றும் Trash பெட்டிகளில் உள்ள மெயில்களிலும் தேடப்பட வேண்டும் எனில், கட்டளை வரியை இவ்வாறு அமைக்க வேண்டும். 

எடுத்துக்காட்டு: in:anywhere movie: All Mail, Spam,மற்றும் Trash ஆகிய அனைத்திலும் “movie” என்ற சொல் உள்ள மெயில்களைத் தேடித் தா என்பது இதன் பொருள்.

cc: இந்த இரு பீல்டுகளிலும் உள்ளதைத் தேடு என்பது பொருள். எடுத்துக்காட்டாக, cc:kannan எனக் கொடுத்தால், கண்ணனுக்கு என்ற பீல்ட் வழி கொடுக்கப்பட்ட மெயில்களை மட்டும் தேடிக் காட்டு என்பது பொருள். இதே போல் bcc:என்ற பீல்டுக்காகவும் தேடலாம்.

after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள். எடுத்துக்காட்டு after:2004/04/16 before:2004/04/18: 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லிருந்து 18 வரை அனுப்பப்பட்ட மெயில்கள்.

is:chat: இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக எனக் கொடுத்தால், சேட் மெசேஜ்களில் “monkey” என்ற சொல் பயன்படுத்தப்படும் மெசேஜ் மெயில்களை மட்டும் காட்டவும்.

Thursday, January 10, 2013

ஏன் பெண்கள் மட்டும் பர்தா அணிய வேண்டும்...?

பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ள முடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே! இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.

எனக்கு எழும் சந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.

''(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்''. (குர்ஆன் 24:30)

இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'சந்தேகம்' வராது.

மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.

Wednesday, January 9, 2013

தவறான விஷம சக்திகளின் வலையில் வீழ்ந்து விடாதீர்கள் - றிஸ்வி முப்தி வேண்டுகோள்


நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த ஐந்து பேர் போதும். இன்று பேஸ் புக்கினால் ஏற்படும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த முடியாது. பேஸ்புக்கின் மூலமாக ஒரு கொஞ்சப் பேரை குழப்பத்திற்காக அணி திரட்டுவது அவ்வளவு ஒரு சிரமமான காரியமல்ல. பேஸ்புக்கின் மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அவதூறாக ஏசிப் பேசினால் அதற்குப் பதிலாக நீங்களும் அவர்களைத் திட்ட ஆரம்பிக்க வேண்டாம். ஸைத்தானிய வார்த்தைகளை நீங்கள் பிரயோகிக்க வேண்டாம். உங்கள் எதிரி உங்கள் மீது மோசமாக நடந்து கொண்டால் நீங்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டாம் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்து கொண்டிருக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பழிக்குப்பழி என்பதைத் தடுத்திருக்கின்றார்கள்.

நீங்கள் அவர்களைத் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.' இவ்வாறு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி கண்டி கட்டுக்கலை ஜும்மாப் பள்ளிவாசலில் வெள்ளிக்கழமை ஜும்மாத் தொழுகை பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பிரசங்கத்தை நிகழ்த்தும்போது,,

 'முப்பது வருட காலத்திற்குப் பிறகு இந்த நாட்டில் ஒரு முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் எங்களுடைய எதிர்கால வெற்றியையும் நோக்கிய பாதையில் நாடு சென்று கொண்டிருக்கின்றது.  இந்தக் கால கட்டத்தில் சில விசமிகள் வெளிநாட்டுச் சக்கதிகளின் தூண்டுதலினால் இணையத்தளங்களினூடாக தவறான விஷமப் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

நாட்டிலே முஸ்லிம்களை விரோதிகளாகக் காட்டும் சில பல காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். உங்களுக்கு நான் அழுத்தமாகச் சொல்கின்றேன் இத்தகைய வேலைகளில் ஒரு பெரிய சமூகம் ஈடுபடவில்லை. இது ஒரு சிறிய குழுவின் நடவடிக்கைதான்.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நாங்கள் கதைத்த போது அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதுவித தீங்கும் நடந்து விடாவண்ணம் முஸ்லிம்களைப் பாதுகாப்பது தனது கடமை என்று கூறியுள்ளார். 

அதேவேளை குழப்பங்களைத் தூண்டுவோரின் சதிவலைகளில் முஸ்லிம்களை வீழ்ந்து விடாமல் மிக மிக அவதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்ளும்படி எங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வாழ்ந்துவிட முடியாது, 

அதேவேளை எம்மதமும் சம்மதம் என்று கூறி எங்களது புனித இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது. இந்த இரண்டுக்குமிடையில் அழகிய முன்மாதிரியைக் கடைப்பிடித்து அவர்களையும் நேர்வழிக்குள் அரவணைக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கென சிறப்பானதொரு அடையாளம் இருக்கின்றதென்பது நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களுக்குத் தெரியும். எனவே அந்த கண்ணியத்தை அவர்களிடம் தொடர்ந்து நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள ஏனைய சமூக மக்களுடன் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு சிறப்பான வழிகாட்டல் பிரகடனத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். இது சுமார் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிலுள்ள சகல முஸ்லிம் உலமாக்களும் கூடி இந்த சிறப்பான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். அதை நாங்கள் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து நாட்டில் சகலருக்கும் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதனைக் கொண்டு இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பௌத்தரும் இஸ்லாத்தைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ அச்சம் கொள்ள வேண்டி நிலைமை ஏற்படாது. அதனை ஒவ்வொரு முஸ்லிம்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும். 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் குப்ருக்கு அனுமதியில்லை. பன்சலையில் சிலைகளை வைப்பதற்குப் அவர்கள் உங்களிடம் பணம் கேட்டால் அதற்கு மட்டும்தான் உதவ வேண்டும் என்பதில்லை. ஒரு பன்சலையில் பாலர் பாடசாலை அன்னதானம் வைத்திய சேவை என்று எத்தனையோ குப்ருக்கு அப்பாற்பட்ட சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களிடம் அவர்கள் உதவி கேட்டால் இவற்றுக்காக நாம் உதவலாம் ஆனால் கண்டிப்பாக குப்ர் ஆன செயல்களை மாத்திரம் தவிர்ந்து மற்ற எல்லாவற்றுக்கும்  உதவலாம். குப்ருக்கு உதவ முடியாது ஆனால், காபிர்களுக்கு உதவி செய்ய முடியும்.  பிள்ளைகள் படிப்பதற்குப் பாடசாலை, மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், அன்னதானம் இவை எல்லாவற்றுக்கும் உதவ முடியும். 

எப்பொழுதும் இஸ்லாமிய சிந்தனையுடன் இஸ்லாமிய அடிப்படைகளுடன் ஈமானிய உணர்வுகளுடன் நடந்து கொள்வதுதான் சிறந்தது.  மனிதர்களுக்குப் பயப்பட வேண்டிய தேவையில்லை அதேவேளை அல்லாஹ்வுக்குப் பயந்து மறுமையுடைய சிந்தனையுடன் நடந்து கொண்டால் எந்த விதமான பித்னாக்களும் ஏற்பட வாய்ப்பில்லை. 

அந்நியர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வோம். மற்றவர்களுடைய உணர்வுகளை அல்லாஹ்வின் தூதர் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதித்து நடந்த அழகிய முன்மாதிரிகள் நம் முன்னே இருக்கின்றது. 

இந்த நாட்டிலே இப்பொழுது எதிர்நோக்கக் கூடிய சில தவறான விஷம சக்திகளின் வலையில் தயவு செய்து வீழ்ந்து விடாதீர்கள். இதனை நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அழகிய வழிமுறைகளால் முறியடிக்க முடியும்.  முதன் முதலாக அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கையேந்தி துவாக் கேட்போம். 

நாங்கள் செய்யும் பெரும் பாவங்களிலிருந்து மீண்டு கொள்வோம். அதற்காக பிழைபொறுக்கத் தேடுவோம். அடுத்தவருடன் நற்குணமுள்ள அணுகு முறைகளைப் பேணுவோம். மற்றவர்களுடன் அழகிய தொடர்பாடல்களை வைத்துக் கொள்வோம். எங்களைப் பற்றி அவர்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்களைத் தெளிவு படுத்துவோம். 

டிசம்பர் 17 ஆம் திகதி ஹலால் உணவுகள் பற்றி அவர்கள் ஏற்படுத்தியிருந்த சந்தேகத்தை நாங்கள் சிங்கள பத்திரிகையில் தெளிவு படுத்தியிருந்தோம். இது பெரும்பாலான சிங்கள சமூகத்தவர்களைச் சென்றடைந்திருக்கிறது. குறிப்பாக பௌத்த பிக்குகள் கூட அதனை வரவேற்றிருக்கின்றார்கள். எங்களுக்கு எதிராக வருகின்ற அனைத்தையும் எங்களையும் இஸ்லாத்தையும் பற்றித் தெளிவு படுத்துகின்ற அருமையான சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்வோம். ஆக்கபூர்வமாக ஆதாரபூர்வமாக புத்தி ஜீவித் தனமாக நாகரீகமாகப் பதிலளிப்போம். அல்லாஹ் நமக்கு வெற்றியைத் தருவான்.' என்றார்.

ஆப்பிள் IOS 6.0.2 புதிய பதிப்பு

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினிக்கான சிஸ்டம் இது. 

இதில் இயங்கிய வைபி இயக்கத்தில் இருந்த ஒரு பிழை திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்ட சாதனங்களை இயக்குபவர்கள், ஆப்பிள் தளம் சென்று தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் தகவல்களுக்கு http://support.apple.com/kb/HT1222 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

இங்கு Software Update சென்று Settings என்பதில் கிளிக் செய்து சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம். அல்லது ஐ ட்யூன்ஸ் (iTunes) வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.

Tuesday, January 8, 2013

பௌத்த, சிங்கள இனவாதிகளுக்கு ஜம்மியத்துல் உலமா சபையின் பகிரங்க சவால்..!

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கட்டனம் அறவிடுவது ஏன்.. ?
(Irfan Mubeen Rahmani 
Division for Halaal Certification
All Ceylon Jamiyyathul Ulama)

  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மக்களின் தேவைக்கேற்ப சமயம் சார்ந்த மற்றும் பொது நலன் கொண்ட விடயங்களில் ஜம்இய்யா பாரிய பணி ஆற்றிவருகின்றது. அது ஒரு போதும் முதலீட்டும் நோக்கம் கொண்டு செயற்படுவதில்லை. தனது பன்முகப்படுத்தப்பட்ட பணிகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையும் ஒன்றாகும். இச்சேவையும் ஜம்இய்யாவின் ஏனைய சேவைகளைப் போன்று சேவைநலன் கொண்டதே அன்றி முதலீட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும் தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கின்றோம்.

சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்  சில நிறுவனங்களின் வேண்டுகோள்களைக் கவனத்திற்கொண்டே 2000ஆம் ஆண்டு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில்  அறுக்கப்பட்ட கோழிகளை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியப்பட்டபோது அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகினர். அவர்களின் வேண்டுகோளை நன்நோக்கம் கொண்டு பார்த்த ஜம்இய்யா  ஹலால் சான்றிதழ் கொடுத்ததோடு  அறுவை மேற்பார்வை செய்பவர்களை இரண்டு நிறுவனத்திலும் நியமித்தது. ஏனெனில் கோழிகளை அறுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அவர்களால் அறுக்கப்படும் ஒவ்வொரு கோழியினதும் ஹலால் தன்மையை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருக்கு குறித்த நிறுவனங்கள் தந்துவந்த பணத்தையே ஊதியமாக கொடுத்து வந்தது.

ஹலால் சான்றிதழ் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரம் ஆரம்பத்தில்  இருந்து வந்தது. உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால்  ஹலால் சான்றிதழின் நுகர்வுச் சந்தையில் ஏற்பட்ட அதிகரிப்பும்  வெளிநாட்டு ஏற்றுமதியின்போது ஏற்பட்ட ஹலால் சான்றிதழின் அவசியமும் பல்வேறு உற்பத்தியாளர்களையும் ஹலால் சான்றிதழ் பெற தூண்டியது.

Leadership and Positive Attitude Development” Two week Training Programme _அறிவுறுத்தல் கடிதமும் கொண்டு வரவேண்டிய பொருட்களும்









For more details click this link
http://pop.nodes.lk/mohesys/

Thank you.

Monday, January 7, 2013

How To Copy From Right Click Disabled Websites

Copy-pasting some body else work is very common. Though, very few people actually give the credit link or mention about the source. Specially, in Blogging people copy each other content and increase plagiarism. Apart from all Auto-bloggging tool, most common form of copying a page is by selecting text > mouse right-click and copy the content. Though in WordPress, we can easily disable this by using disable right click WordPress plugin. Though according to me right click gives a bad user experience and for Bloggers, you can always fight such copy-paste blogger using Google DMCA.

Now for me, when I have to write a tutorial, I take information from the pages on Internet and give proper credentials with link in the post. Now, the problem which I have faced recently is many of these sites have right click disabled and it’s pain to copy from these sites normally. So, here I have compiled a series of possible ways to copy content from those pages. FYI, many websites disable CTRL +C options to ensure better security from hackers and malicious sites.

Ways to copy text from Right click Disabled pages:

Most of the bloggers and webmasters uses JavaScript technique to disable right-click, to prevent scrapers sites from stealing their content.

Many times we often come to websites where we found contents useful like how-to , Guides and we copy it into worded or notepad. Generally we select some text and then right click to copy. But on Protected sites a message box appears saying “Right-Click on this site is disabled. Hold Ctrl key and click on link to open in new tab”

But there are numerous way through one can copy contents from Right Click protected sites
By disabling browser JavaScript in browser


Using Proxy Sites
By Using the source code of the site
Disabling JavaScript in Browsers [Google Chrome]

In Chrome browser, you can quickly disable JavaScript by going to settings. See the screenshot for better explanation:


Goto Setting >> UnderHood Tab >> Content Settings
or enter chrome://settings/content
Then Select Do not allow any site to run JavaScript

Similarly if you are using Firefox, you can remove the tick from “Enable JavaScript” option.

Using Proxy Sites

There are many proxy sites, which let you disable JS while browsing. All you need to use thoseproxy sites, which offer such features and you can quickly use right-click on click disabled sites.



Through Viewing Source Code

If you have to copy the specific text content and you can take care of HTML tags, you can use browser view source options. All the major browser give an option to source of the page, which you can access directly using the format below or by right click. Since, right click is out of question here, we will simply open chrome browser and type: view-source: before the post URl Like
view-source:http://www.shoutmeloud.com

And find the paragraph or text you want to copy and then paste it into any text editor.

Well, using this trick ethically or unethically is in user hand but for a normal blogger like me and you, this tip will certainly help. Do you use any other plugin or add-on to copy content of pages with right click disabled? Do you also see this feature as bad user experience?

Sunday, January 6, 2013

இலங்கை முஸ்லிம்கள் தமது தாய்நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு - ஜும்ஆ பயானில் விளக்கம்

(கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில்
04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று அஷ்ஷைக்
ரீ.ஹைதர் அலி (அல்-ஹலீமி) ஆற்றிய ஜும்ஆ
குத்தபா இது)

எம்மில் சில சகோதரர்கள் ' நாம் அந்நிய நாட்டில் வாழக் கூடியவர்கள் எனக் கூறிக் கொண்டு தம்மையே (முஸ்லிம்கள்) தாழ்த்திக் கொள்கின்றனர். இது பிழையான கூற்றாகும். நாம்
இந்தப் பூமியிலே தான் பிறந்தோம். இன்ஷா அல்லாஹ் இதிலே இறந்தால் இந்தப் பூமியிலேதான் அடக்கம் செய்யப்படுவோம். எனவே இந்தப் பூமி எமக்கும் சொந்தமானது. இது எமது தாய் நாடு. இந்நாட்டை நாம் நேசிக்க வேண்டும்' என அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்- ஹலீமி தெரிவித்தார்கள். அவர் தமது பிரசங்கத்தில் மேலும் தெரிவித்ததாவது, இன்று சில தீய சக்திகள் முஸ்லிம்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
மட்டுமின்றி முஸ்லிம்களை தேசத் துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க முனைகின்றனர். இதனைச் செய்வது சில
விஷமிகளே அன்றி எல்லா பௌதர்களும் அல்லர். மேலும் வரலாற்றில் ஒரு காலமும் முஸ்லிம்கள் இந்நாட்டை பிடிக்கவோ அல்லது இதனை நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்றோ முயற்சித்தது கிடையாது. மாறாக இந்நாட்டை பௌத்தர்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்றே விரும்பினர். அதற்காக தம்மாலான முயற்சிகளை முழமையாக மேற்கொண்டனர். அவைகளுக்கு கீழ்வரும் வரலாற்றுக் குறிப்புகள் சான்றாகும். 1. கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே 1642ல் மாத்தறையில் 200 முதல் 300 வரையிலான ஆண்களைக் கொலை செய்ததோடு பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினர். 2. போர்த்துக்கீசரை துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவே அல்லது ஒரு நன்றிக்கடனாகவே மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் அக்குரனையில் காணி வழங்கி முஸ்லிம்களைக் குடியேற்றினான். 3. கண்டி மன்னன் ஒல்லாந்தரைத் துரத்துவதற்காக உஸ்மான் லெப்பே மௌலா முஹாந்திரம் என்பவரை கர்நாடகா நவாப் முஹம்மத் அலியிடம் தூதனுப்பினார். 4. தமக்கு சுதந்திரமளிப்பதாக அளித்த வாக்குருதியை நிறைவேற்றுமாறு கோரிஅரசாங்க சபை இரண்டாம் உலக யுத்தத்தின் பின் கோரிக்கை விடுத்த போது 3 முஸ்லிம் உறுப்பினர்களும் எவ்வித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு நல்கினர். 5. இப்பிரேரணை பற்றி D.P. ஜாயா அரசாங்க சபையில் பின்வருமாறு உரையாற்றினார் ' இனரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும் அடைவதைவிட சுதந்திரம் பெறுவது ஒரு முஸ்லிமுக்கு மிகவும் முக்கியமானது. மக்களின் பிறப்புரிமையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை.' 6. இதன்பின உரையாற்றிய swrd பண்டாரநாயக்கா முஸ்லிம் உறுப்பினரின் ஆதரவுக்காக தனது சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும், முஸ்லிம்களின் நியாயபூர்வமான எந்தக் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்க்க தான் சித்தமாக இருப்பதாகவும் கூறியமை நோக்கத்தக்கது. 7. 1939ல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் சட்டசபை உறுப்பினராகக் கடமையாற்றிய மாகான் மாகார் உரையாற்றும்போது, பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.இந்நாட்டை சிங்களவர்கள் ஆட்சி செய்வதை நான் எதிர்க்கவில்லை என்பதை நான் என் மனசாட்சியை சானறாக வைத்துக் கூறுகிறேன்' எனக்கூறினார். 8. இதே கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய இளம் அரசியல்வாதி பதீஉத்தீன் மஹ்மூத் 'எமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.' எனக் கூறினார். சேவை அடிப்படையிலும் எம் நாட்டு சிங்கள மன்னர்களுக்கு முஸ்லிம்கள் மிக நம்பிக்கையாகவும், தமது அந்தரங்க விடயங்களை அறிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். குறிப்பாக வைத்தியத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய பணிக்காக வேண்டி அன்றைய மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சன்மானங்கள் கொடுத்து கௌரவித்தனர். * கண்டியின் அரச நிர்வாகத்திலும் முஸ்லிம்கள் பங்குகொண்டிருந்தனர். கண்டியில் மக்கள் செய்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு பல திணைக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பந்த
என அழைக்கப்பட்டன. இராஜ சிங்கனின் காலத்தில் (1747 – 1781) ஷேஹ் ஆலிம் என்பவர் மடிகே பந்த எனும் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் மடிகே பந்த நிலமே என அழைக்கப்பட்டார். * இதேபோல முகாந்தரம், லேகம், கிராமத்தலைவர் எனும் பதவிகளையும் முஸ்லிம்கள் வகித்தனர். கண்டிய அரசின் வைத்தியத் துறைத்தலைவராகவும் முஸ்லிம்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெஹேத்கே முகாந்திரம் நிலமே என்றழைக்கப்பட்டனர். ராஜபக்ஷ வைத்தய திலக கோபால எனும் குடும்பப் பெயர் கொண்டழைக்கப்பட்ட முஸ்லிம் வைத்தியருக்கு கண்டி மன்னன் 1747ல் உடுநுவரையில் நிலம் வழங்கி கௌரவித்தான். * மற்றொரு வைத்தியரான பூவலிகட வெதராலகே அபூபக்கர் புள்ளே என்பவருக்கு 1786ல் தஸ்கரையில் நிலங்களை வழங்கினான். * கண்டி மன்னனின் படையில் 2ம் இராஜசிங்கனின் காலத்தில் (1635 – 1687) இருந்து முஸ்லிம்கள் இராணுவ வீரர்களாகக் கடமையாற்றியுள்ளனர். 1810ல் 250 முஸ்லிம் வீரர்களும் 200 மலாய் வீரர்களும் கண்டி மன்னனின் படையில் பணியாற்றினர். நாம் ஏன் பல தசாப்த கால நிகழ்வுகளுக்குக்குச் செல்ல வேண்டும்? இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு பெறாத நிகழ்வுகளும் உள்ளன. அதாவது இந்நாட்டுக்கும் இந்நாட்டு இறைமைக்கு மட்டுமல்லாதுஇந்நாட்டு தலைமைக்கும் ஆபத்து வரப் போகிறது என்பதற்காக, எமது நாட்டு முஸ்லிம்களின் தலைவர்களான அ.இ.ஜ.உ வின் தலைவர் உற்பட உபதலைவரும் ஐ. நா சபை சென்று தமது நாட்டுக்கும் நாட்டுத் தலைவருக்கும்
ஆதரவு வழங்குமாறு பரிந்துரை பேசச் சென்றதை இந்நாட்டு முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை. பெரும்பான்மை சமூகமும் மறக்க முடியாது. ஆனால் நாட்டினதும், நாட்டு மக்களினதும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்தத் தலைவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து எழுதுவது முஸ்லிம்களின் உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது எனவும் தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

-Thanks JaffnaMuslim-

Saturday, January 5, 2013

இஸ்ரேல் பிறந்தது எப்படி...?


அவர்கள் சிந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.


அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.


இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?


அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.


இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.


ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.


அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.


அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.


அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். 


இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர். 


அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. 


எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.


முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.


பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. 


அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.


1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?


பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும். 


எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.


இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.


ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.


1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் 


வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.


‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.


உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.


ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.


1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.


ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.


பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.


அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். 


அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.


1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. 


அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.


ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.


1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.


பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.


அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.


ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள் அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.


மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.


2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.


ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.


எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.


மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.


முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.


இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.


ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். 


ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.


பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.


வலல ரஹ்மான் பாலஸ்தீனிய மாக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக வலைத்தளங்களில் தமிழில் டைப் செய்வதற்கு மிகச் சிறந்த ஒரு முறையை இதோ உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
  1. கீழுள்ள link ஐ click செய்து  InputToolsSetup.rar என்ற file ஐ download செய்யுங்கள்.
  2. InputToolsSetup.rar 
  3. InputToolsSetup.rar file ஐ  winrar அல்லது winzip மூலம் extract செய்து Input ToolsSetup.exe ஐ double click செய்து  install செய்யுங்க .
  4. இனி Desktop இன் அடியிலுள்ள டாஸ்க் பார் இல் TA Tamil (India) என்பதை select செய்யுங்க. 
  5. நீங்க செய்ய வேண்டியது அவ்வளவுதான் 
  6. இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் சுலபாமாக தட்டச்சு செய்யலாம்.

.... பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க ...