Monday, September 15, 2014

Free Medical Books pdf

Here is a blog which contain medical books. It is very useful for medical students and others who are interested in medical field.

1. Go to msgtoall.blogspot.com
2. Click the page "Medical Books"
3. Follow the instruction (drag the cloud into position)


4. This is a snapshot of the page
5.  Download what you want.

Enjoy yourself and share this page with others.

Wednesday, September 10, 2014

அரபு மொழி கற்போம்

டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நாம் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கின்றோமா இல்லையா என்பதை நமது குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன்மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. எங்கும் இஸ்லாத்தை சொல்லுவோம் எமது செயல்களால்....!


Saturday, September 6, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

  1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
  10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

Wednesday, September 3, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...

சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...

கோள்களின் இயக்கம்:


கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது. 
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.

Tuesday, September 2, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
(54:22) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (54:22)
பெருவெடிப்பு கொள்கை (bigbang theory )

விஞ்ஞானம், இந்த உலகத்தின் தோற்றம் பரிணாமத்தின் அடிப்படையில் பெருவெடிப்பு கொள்கையினால் உருவானது என்கிறது. 

பெருவெடிப்பு கொள்கையை பற்றி சற்று பார்ப்போம். இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார். ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின்பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.