அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...
கோள்களின் இயக்கம்:
கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது.
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.

