Saturday, March 15, 2014

சிறுவர் துஸ்பிரயோமற்ற உலகை உருவாக்குவதற்கு....?

பிரபஞ்சங்களின் ரப்பினது வழிகாட்டலில் உலகம் வழிநடாத்தப்படவேண்டும்!
  1. உலகில் 100 மில்லியன் பிள்ளைகள் வீடுகளற்ற நிலையில் வீதிகளில் வசிக்கிறார்கள்.
  2. நோயினாலும் போசாக்கு குறைபாடாலும் ஒரு கிழமைக்கு 250,000 பிள்ளைகள் மரணமடைகிறார்கள்.
  3. உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் சிறுவர்கள் பாலியல் போகப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்
  4. இருபது மில்லியன் சிறுவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
  5. பத்து மில்லியன் சிறுவர்கள் சிறுவர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
  6. எயிட்சினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள் சுமார் 2010 இல் 30 மில்லியன்.



இத்தகைய ஒரு கொடூர நிலைக்கு இட்டுச்சென்றது எது?
  1. ஏகாதிபத்தியவாதிகளது பொருளாதார நலன்களுக்கான நாடுகள் மீதான அத்து மீறல்.
  2. மேற்கினது சுரண்டலை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமை.
  3. அவர்களது சமூக கலாச்சார விழுமியங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் (எயிட்ஸ்)
  4. மற்றும் இன்றைய முதலாளித்துவ அரசுகளது சுயனநலப்போக்கு.
இத்தகைய இழிநிலையில் இருந்து மீட்சிபெற இஸ்லாம் மீள உலக தலைமைத்துவத்தை பெற்று உலகினை இறைவழிகாட்டல் அடிப்படையில் ஆட்சி செய்ய வேண்டும்.

இது குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்,

"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்." (அல்குர்ஆன் 16:89)


Friday, March 14, 2014

முதலாளித்துவம் ஒரு சுயநலவாதம் !

இன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் நலனில் பலரின் வாழ்கையினை பனையம் வைத்து பயணம் செய்யும் ஒரு சுயநல அரசியல். அது இன்று தனக்கான மாற்று அரசியல் இல்லாதநிலையில் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிலைநாட்டி வாழ்ந்து கொண்டு இருக்கின்றது .

இயல்பிலேயே சுயநலப்பார்வை உள்ள மனித குலமும் அதன் தாக்கத்தினால் அது அழைக்கும் இலக்கு நோக்கியே பயணிக்கின்றது. உலகின் ஒவ்வொரு பொருளிலும் விடையத்திலும் அதன் தாக்கத்தை நாம் காண முடியும் . குடும்ப உறவுகள், சமூகஉறவுகள், சர்வதேசஉறவுகள், கல்வி, தொழில், நட்பு, இப்படிஎல்லா விடயங்களும் அதன் கட்டுப்பாட்டில்தான் என்றால் அது மிகையான கருத்து அல்ல .

ஆனால் இந்த முதலாளித்துவம் காலனி ஆதிக்கமாய் பல நூற்றாண்டுகள் உலகை ஆண்டு தமது மூல தேசம் நோக்கி ஆளும் தேச வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி சென்ற போது அதற்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தை மேற்கொண்ட மனித குலம் இன்று மௌனமாகவோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே தான் தமது எதிர் கருத்தை,போராட்டத்தை முன்வைக்கின்றது.காரணம் முதலாளித்துவ சித்தாந்தத்தை தனது வாழ்க்கை வழி முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டு அதனால் வரும் விளைவு களுக்கு எதிராக மட்டுமே தமது எதிர்ப்பை காட்டுகின்றது ! அதுவும் அந்த சித்தாந்தத்தின் இன்னொரு தீர்வின் ஊடாகவே அந்த எதிர்ப்பும் காட்டப்படுகின்றது .

தமது காலனி ஆதிக்கத்தை விட்டு முதலாளித்துவம் மற்றைய நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் கொடுத்தது என்பது ஒரு வேடிக்கையான கருத்து !! இங்கு நடந்தது என்னவென்றல் ஒரு பறந்த நவ காலனித்துவ சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது தான் !! இங்கு அவர்கள் வைத்திருந்த நேரடி மனித அடிமைத்துவம் உரிமை சீட்டு எழுதப்பட்ட அடிமைத்துவமாக மாற்றப்பட்டது மட்டும்தான்!!! உண்மையில் மனிதர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுளோம் ! ஏமாற்றப்படுகின்றோம்!! இனியும் மிகச்சரியாக சிந்திக்காதவரை ஏமாற்றப்படுவோம் !!

Wednesday, March 5, 2014

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

  1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.
  2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!
  3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.
  4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன? முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான். கண்ணகிக்கு சிலை வைக்கவில்லையென்றால் உயிரையும் கொடுப்பான் தமிழன் என்று மார்தட்டி கற்புக்கரசி சிலைக்காக போராட்டமெல்லாம் நடத்தினார்களே அதே தமிழகத்தில் தான் இத்தனை கேவலங்களும்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறதே, யார் காரணம்? ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?

கலாச்சாரத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இது போன்ற தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலாச்சாரம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிலேயே பலருக்குத் தெளிவிருப்பதாகத் தோன்றவில்லை. கலாச்சாரம் என்றால் இந்து மத அடையாளங்களென்றும், அவ்வாறான இந்து மத அடையாளங்கள் எல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லாத பழம்பஞ்சாங்க விஷயம் அல்லது மூட நம்பிக்கை என்றும் பலருக்கு போதிக்கப் பட்டிருக்கிறது, தொடர்ந்து போதிக்கப்பட்டும் வருகிறது.

Monday, March 3, 2014

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 


"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான். 

Sunday, March 2, 2014

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

   இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...

"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.