புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.
ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.
இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்
