மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - meelparvai.net
நவீன காலனித்துவ மூலோபாய திட்டமிடல்களின் படி புதிய உலக ஒழுங்கில் தேசங்கள் மீதான நேரடி ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதில்லை.
துருவ மயப்படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் அரசியல் பொருளாதார இராணுவ நலன்களிற்கேற்ப தேசங்களின் ஆட்சி அதிகாரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.
சோஷலிச கம்யூனிச அதிகார மையங்களுடன் அணி சேர்ந்தோ அல்லது சேராமல் தனியாகவோ அல்லது பிராந்தியங்களில் கூட்டாகவோ ஒத்துழைக்க மறுக்கும் தேசங்களில் அரசியல் பொருளாதார இராணுவ இஸ்திரத் தன்மைகளை ஆட்டங் காணச் செய்கின்ற மூலோபாய நகர்வுகள் மேலாதிக்க சக்திகளினால் முடுக்கி விடப் படுகின்றன.
ஐகிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச நீதி மன்றம், சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி உற்பட அத்தனை சர்வதேச அமைப்புக்களும் நவயுக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளால் தமது நலன்களுக்கேற்ப நகர்த்தப் படுகின்றன.


